districts

img

போக்குவரத்து கழகங்கள் தனியார் மயத்தை எதிர்த்து இருசக்கர வாகன பிரச்சாரம்

உளுந்தூர்பேட்டை, மார்ச் 11 - சேவைத் துறையான போக்கு வரத்து கழகங்களை தனியார்மய மாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், வரவுக்கும் செலவுக்குமான வித்தி யாசத் தொகையை போக்குவரத்து கழகங்களுக்கு அரசே வழங்க வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் இரு சக்கர வாகன பிரச்சாரம் நடை பெற்றது. அதன் நிறைவு நிகழ்ச்சி உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. விழுப்புரம் மண்டலச் செய லாளர் வி.சாமிநாதன் தலைமை தாங்கினார். சிஐடியு விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ஆர்.மூர்த்தி, கள்ளக்குறிச்சி மாவட்டச் செய லாளர் எம்.செந்தில், பொதுச் செய லாளர் எச்.ரகோத்தமன், பொரு ளாளர் கே.சுந்தரபாண்டியன், துணைத் தலைவர் வேலு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.ஆறு முகம், சிஐடியு பொருளாளர் ஏ.வீரா சாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத் தலைவர் ஜி.ஆனந்தன் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். பணிமனை செயலாளர் சி.சுப்பிர மணியன் நன்றி கூறினார். முன்னதாக உளுந்தூர்பேட்டை திருச்சி - சேலம் சாலை சந்திப்பிலிருந்து பணிமனை வரை ஊர்வலம் சென்றனர். அங்கு பணிமனையில் பொருளாளர் கே.திரு முருகன் தலைமையில் சங்க பெயர் பலகை திறக்கப்பட்டு செங்கொடி ஏற்றப்பட்டது.