வில்லிவாக்கம் பகுதி, அயன்புரம் குட்டியப்பன் தெருவில் இரண்டு வீடுகள் தீ விபத்திற்கு உள்ளானது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 98வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆ. பிரியதர்ஷினி நிவாரண உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் பகுதிச் செயலாளர் ஜி.அன்பழகன், மாவட்ட குழு உறுப்பினர் எம்.ஆர்.மதியழகன், பகுதி குழு உறுப்பினர்கள் வி.டில்லிபாபு, ஏ.எல். மனோகரன், ஐசிஎப் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.