திருவண்ணாமலை,ஏப்.24- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் பெரணமல்லூர் கிளையின் சார்பில் களம்24 நிகழ்வாக உலகப் புத்தக தின நிகழ்வுகள் நடை பெற்றன. நிகழ்ச்சிக்கு துணைத் தலைவர் இரா. ராஜ சேகரன் தலைமை தாங்கி னார். வ.பழனி வரவேற்பு ரையாற்றினார். எழுத்தா ளர் அச்சம்மாள் கபில் தேவ் எழுதிய ‘விதை நெல்’ சிறுகதைத் தொகுப்பினை கவிஞர் பூங்குயில் சிவக்குமார் வெளியிட்டும் கிளையின் துணைத்தலைவர் பொன்.விஜய அசோகன் நூலைப் பெற்றுக் கொண்டும் பேசினர். நூலாசிரியர் ஏற்புரை நிகழ்த்தினார். எழுத்தாளர் பெரண மல்லூர் சேகரன் எழுதிய “மீட்டாத வீணையும் மீட்கும் கீதங்களும்” எனும் சிறுகதைத் தொகுப்பினை தமுஎகச திருவண்ணா மலை மாவட்டத் தலை வர் கவிஞர் நா. முத்து வேலன் வெளியிட்டு உரை நிகழ்த்தினார். நூலைப் பெற்றுக் கொண்டு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திரு வண்ணாமலை மாவட்டச் செயலாளர் க.பிரபு உரை யாற்றினார். நூலாசிரியர் ஏற்புரை நிகழ்த்தினார். கவிஞர் பி. மாலவன் “வாசிப்பே சுவாசிப்பாய்” எனும் தலைப்பில் உரை யாற்றினார். கவிஞர் தமிழ் ராசா கவிதை வாசித்தார். இறுதியில் கிளை பொருளாளர் தேவதாஸ் நன்றி கூறினார்.