districts

போதை பொருட்களை கடத்திய இருவர் கைது

கள்ளக்குறிச்சி, ஏப். 20- கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை உதவி ஆய்வாளர் அகிலன் தலைமையில் காவல் துறையினர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு பைக்கில் வந்த இரண்டு பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த 2 மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 2 பேரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் தென்முடியனூர் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார், கார்மேகம் என்பதும், இவர்கள் கிராம பகுதியில் உள்ள கடைகளுக்கு போதை பொருட்களை விநியோகம் செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்த 2 மூட்டை போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் 1 லட்ச ரூபாய் எனக் கூறப்படுகிறது.

;