districts

img

பழவேற்காடு கடற்கரைப் பகுதியில் சுனாமி நினைவு அஞ்சலி

பழவேற்காடு கடற்கரைப் பகுதியில் சுனாமி தினத்தை அனுசரிக்கும் வகையில் நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி 18 ஆவது ஆண்டு சுனாமி தினமான திங்களன்று வைரவன்குப்பம் மீனவ கிராம கடலோரப் பகுதியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கிராம மக்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி மலரஞ்சலி செலுத்தினர்.