கடலூர், மார்ச் 18- தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் கந்தசாமி நாயுடு பெண்கள் கலைக் கல்லூரி இணைந்து சர்வதேச மகளிர் தினம், உலக நுகர்வோர் உரிமை தினம் மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணி செய்தவர்களுக்கு விருது வழங்கும் விழாவுமாக முப்பெரும் விழா நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கே.என்.சி கல்லூரி முதல்வர் சபீனா பானுதலைமை தாங்கினார். உதவி பேராசிரியரும் நுகர்வோர் சங்க ஒருங் கிணைப்பாளர் டாக்டர்.கவிதா வரவேற்க தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொது செய்யலார் வி.லெனின் நோக்கவுரை ஆற்றினார். தமுஎகச மாவட்ட செயலா ளர் கவிஞர் பால்கி, பல்வேறு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள் திருநாவுகரசு, ரமேஷ், சபீனா நிஜம் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கி னர். ஹெச்.ஆர்.டி.எப் நிறுவன பொறுப்பாளர் ஸ்ரீனி வாசன் செயற்கை நுண்ண றிவு மற்றும் சைபர் குற்றம், பிராங்க் முறை அட்டூழியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து வழக்கறி ஞர் சி.பி சந்திரன் பேசி னார். வழக்கறிஞர் சிவனேஸ் வரி, நெய்வேலி செல்வ குமார், சந்திராமாலா .எஸ்.எம்.கே ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய விருத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது, தில்லியில் நடைபெற்ற வி.ஆர்.கிருஷ்ணஐயர் நினைவு விருதும் ரொக்க பரிசும், மனித உரிமை மற்றும் சமூக சேயற்பாட்டா ளர் பால்கிக்கு வழங்கப் பட்டது.நிறைவாக வணிக வியல் பேராசிரியர் ராஜலக்ஷ்மி நன்றி கூறினார்.