திருவள்ளூர், நவ.26- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், திருவள்ளூர் மாவட்ட குழு சார்பாக சனிக்கிழமையன்று (நவ 25) கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் கிளை நூலகம், பெரியார் அரங்கத்தில் விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யாவுக்கு நினைவஞ்சலி கூட்டம், கருத்தரங்கம், கவியரங்கம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமுஎகச மாவட்டத் தலைவர் எழுத்தாளர் இ.தனுஷ்கோடி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை செந்தமிழ் விஜயன் ஒருங்கிணைத்தார். தமுஎகச மாவட்டச் செயலாளர் கவிஞர் கி.பாரி, கருத்தரங்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகி ப.ஜெயநாராயணன், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் இ.ராஜேந்திரன், வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ப.லோகநாதன் எம்சி, கவிஞர் இர. ராமச்சந்திரன் ஆகியோர் பேசினர். கவியரங்கில் கவிஞர்கள் ச. சுரேஷ் பாரதி, பரணம்பேடு சண்முகம், ஆசிரியர் செ. பரமசிவன், இரா. முனுசாமி, நத்தம் கோபிநாதன், மீஞ்சூர் பூபதி ஆகியோர் கவிதை வாசித்தனர். பன்பாக்கம் இரா. சரவணன் நன்றி கூறினார்.