தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலக்குழு உறுப்பினரும், நாடக, திரைப்பட கலைஞருமான ‘பூ’ ராமுவின் மறைவிற்கு புதுச்சேரியில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பிரதேச தலைவர் உமா அமர்நாத் தலைமை தாங்கினார். தமுஎகச மாநிலப் பொருளாளர் ராமச்சந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் பாவலர். சண்முகசுந்தரம், பிரதேச செயலாளர் கலியமூர்த்தி உள்ளிட்டோர் புகழஞ்சலி செலுத்தினர்.