districts

img

சுனாமி நினைவு தினம்: கடலூரில் அஞ்சலி

கடலூர்,டிச.26- கடலூரில் சுனாமியின்  19 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சிங்காரத் தோப்பு, தேவனாம்பட்டினம் கடற்கரையில் ஏராளமான  பெண்கள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கடலோர மாவட்டங்களில் சுனாமி பேரலை தாக்கியது. இப்பேரலையில் சிக்கி கடலூர் மாவட்டத்தில் 617 பேர் உயிரிழந்தனர். 40 பேர் மாயமாகினர். கடலோர கிராமங்கள் அழிந்தன. அழிப்பேரலையால் ஏற்பட்ட துயரத்தில் இருந்து கடலோர மாவட்டங்கள் இன்றளவும் மீளவில்லை. அதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் சுனாமி நினைவு தினம் கடலோர மாவட்டங்களில் அனு சரிக்கப்படுகிறது. மீனவர்கள் மீனவர் பெண்கள் கடலூர்  முதுநகர், சிங்காரதோப்பு மற்றும் தேவனாம்பட்டினம் உள்ளிட்ட கிராமங்கள்  கடற்கரை நோக்கி மலர்கள், பால் குடத்துடன் ஊர்வலமாக சென்று கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.  கடலூர் துறைமுகத்தில் தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதே போல் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் உள்ள சுனாமி நினைவு தூணில் மீனவர்கள்  ஊர்வலமாக வந்து ஆழிப்பேரலையால் உயிர் நீத்தவர்களுக்கு  மெழுகு வர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தி னர்.  இதேபோல் அனைத்து கட்சியினரும், தன்னார்வ அமைப்பினர், சமூக ஆர்வலர்க ளும், பொதுமக்களும் இந்த நினை விடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.