வண்டலூர்,ஜன.18- செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இரண்டாயிர த்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங் கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு காண்டாமிருகம், நீர்நாய், முதலை கள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளன. பணியாளர்கள் தொடர்ந்து கண் காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விலங்கு களின் நடவடிக்கைகள் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வண்டலூர் உயிரி யல் பூங்காவில் பணியாற்றி வந்த பணியா ளர்களுக்கு வைரஸ் தொற்று உறுதியானது. இதனையடுத்து பூங்கா நிர்வாகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் 300க்கும் மேற் ்பட்ட நபர்களுக்கு வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேற் ்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 76 பூங்கா ஊழியர்களுக்கு கொரோனா தோற்று உறுதியானது. குறிப்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா வில் ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி யானதை அடுத்து வருகின்ற 31ம் தேதி வரை உயிரியல் பூங்கா முழுமையாக மூடப்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. ஊழியர்கள் மூலம் விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவ கூடாது என்பதற் ்காக பூங்கா நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்காவை மூடி உத்தர விட்டுள்ளது . அனைத்து ஊழியர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். விலங்குகளுக்கு பரிசோதனை இதனை அடுத்து விலங்குகளுக்கு மனிதர் ்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவி யிருக்கலாம் என்பது விலங்குகளுக்கு திங்கள் முதலே வைரஸ் தொற்று பரி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளும் போது 17 வயது பெண் சிறுத்தைக்கு பரிசோதனை மேற்கொள்ளும் பொழுதுகூண்டில் திடீரென கோளாறு ஏற்பட்டு சிறுத்தை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.இது வரை 16 விலங்குகளுக்கு ஒருநாள் பரி சோதனை மேற்கொள்ளப்பட்டு மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. பரி சோதனையின்போது சிறுத்தை உயிரிழந்ததால் தற்போது தற்காலிகமாக பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளது. விலங்குகளுக்கு பரிசோதனை முடிவு வந்த பிறகு தேவைப்பட்டால் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வண்டலூர் பூங்கா நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, 17 வயதுள்ள சிறுத்தை பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது கூண்டில் எந்திரக் கோளாறு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்தனர்.