districts

img

ஓய்வு பெற்றோரை மீண்டும் பணியமர்த்துவதா பணிமனைகளில் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூன் 20 -

    ஓய்வு பெற்றவர் களையே மீண்டும் ஓட்டுநர், நடத்துநர்களாக நியமிக்க மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு செய்துள்ளது.  

    இதற்கு எதிர்ப்பு தெரி வித்து செவ்வாயன்று (ஜூன் 20) பணிமனைகளில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மாநகர போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்து நர் பற்றாக்குறையை கார ணம் காட்டி ஊழியர்களுக்கு அவ்வப்போது பணி மறுத்து, விடுப்பாக கணக்கிடு கிறது. இதனால் ஊழியர்க ளுக்கு ஊதிய இழப்பு ஏற்படு கிறது. எனவே, வேலை வாய்ப்பு அலுவலகம் வாயி லாக ஓட்டுநர், நடத்து நர்களை நியமிக்க கோரி அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது.

    இதற்கு மாறாக, ஓய்வு பெற்ற ஓட்டுநர், நடத்து நர்களை தினக்கூலி அடிப் படையில் மீண்டும் பணிய மர்த்த நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது. வேலை நிறுத்த நோட்டீஸ் மீது தொழிலாளர் தனித்துணை ஆணையர் நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் வழங்கிய அறிவுறுத்தலுக்கு மாறாக, நிர்வாகம் செயல்படுகிறது.

    இதனால் போக்குவரத்து கழகத்திற்கும், தொழி லாளர்களுக்கும் மிகுந்த பாதிப்பு ஏற்படும். எனவே, தினக்கூலி முறையில் ஊழியர்கள் நியமிப்பதை கைவிட்டு, வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பணி நியமனம் செய்ய வேண்டும். பணி மறுக்கப் படும் தொழிலாளர்களுக்கு மாற்றுப்பணி அல்லது ஊதி யம் வழங்க வேண்டும், வாரிசுதார்களுக்கு விரைந்து வேலை வழங்க வேண்டும், ஊதிய ஒப்பந்த சரத்துக்களை அமல் படுத்துவதோடு, 7 மாத நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

   தாம்பரம் பணிமனை யில் சங்கத்தின் தலை வர் ஆர்.துரையும், அயனா வரம் பணி மனையில் பொரு ளாளர் ஏ.ஆர்.பாலாஜியும் கலந்து கொண்டனர்.