சென்னை,ஜூலை 17-
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் போரூர் முதல் கத்திபாரா வரை உயர்த்தப்பட்ட வழித்தடத்திற்கு கட்டுமான பணி நடைபெற்று வரு கிறது. மவுண்ட்-பூந்த மல்லி சாலை முகலி வாக்கத்தில் பணிகளை மேற்கொண்டு வருகிறது. வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 11 மணிமுதல் திங்கள்கிழமை காலை 5 மணிவரை மெட்ரோ ரயில் பணி மேற்கொள்ள போக்கு வரத்து மாற்றம் செய்யப் படுகிறது.
சென்னை பூந்தமல்லி யில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் அனைத்து வணிக வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களும் (அரசு பேருந்துகள் தவிர்த்து) போரூர் சுங்கச்சாவடி சர்வீஸ் சாலை வழியாக சென்னை புற வழிச்சாலை மூலம் அவர்களது இலக்கை சென்று அடையலாம்.
அனைத்து வணிக வாகனங்களும் சாலை வழியாக போரூர் நோக்கி செல்லும் மற்றும் கனரகவாகனங்களும் போரூர் சந்திப்பில் மாற்று பாதையில் ஆற்காடு சாலை வழியாக சென்று அவர்களது இலக்கை அடையலாம்.
குன்றத் தூரில் இருந்து போரூர் சந்திப்பு நோக்கி செல்லும் அனைத்து வணிக வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களும் மாற்று பாதையில் போரூர் சந்திப் பில் ஆற்காடு சாலை வழி யாகசென்று அவர்களது இலக்கை அடையலாம். சென்னை கத்தி பாராவில் இருந்து போரூர் மற்றும் பூந்த மல்லி நோக்கி செல்லும் அனைத்து வணிக வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் மவுண்ட்- பூந்த மல்லி சாலையில் மேற் கண்ட தினங்களில் மெட்ரோ ரயில் பணி நடை பெறுவ தால் அன்றைய தினம் இவ்வாகனங்களை உள்வட்ட சாலையில் கோயம்பேடு வழியாக இயக்குவதற்கு சாலை போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி அரசு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படஉள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.