கடலூர், அக்.30- போக்குவரத்து தொழி லாளர் சிஐடியு சங்கத்தின் முன்னாள் பொதுச் செய லாளர் ஏ.ஜான்விக்டர் குளியல் அறையில் வழுக்கி விழுந்து, தலையில் பலத்த அடிபட்டு பல நாட்கள் சிகிச்சை பெற்று வந்த ஜான்விக்டர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக் கிழமை (அக்.29) கால மானார். வடலூர் ஜெயப்பிரியா நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டிருந்து ஜான் விக்டரின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் டி.ஆறுமுகம் உள்ளிட் டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். சிஐடியு தலைவர்வர்கள் பி.கருப்பையன், ஜி. பாஸ்கரன், வி.கிருஷ்ண மூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றிய செய லாளர் எம்.பி.தண்டபாணி, விவசாய சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.கே. சர வணன், டி.கிருஷ்ணன், வட லூர் அமைப்பு குழு செய லாளர் ஆர்.இளங்கோவன், கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் எம்.மணி, பி. அழகு முத்து, மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.எஸ்.ராஜ், ஆர்.சிவகாமி, கட்டுமான சங்க மாவட்ட தலைவர் கே.சீனிவாசன், வடலூர் நமச்சிவாயம் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஜான் விக்டரின் குடும்பத்தி னருக்கு செல்பேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார். ஆண்டிமடம் அருகில் உள்ள பூவாணிபட்டு கிராமத்தில் பிறந்தவர் ஜான்விக்டர். 1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிக்கு சேர்ந்தார். கடலூர், பாண்டி, நெய்வேலி, வடலூர் பணிமனைகளில் பணியாற்றினார். மத்திய சங்கத் துணைச் செயலாளர், மத்திய சங்க பொதுச் செயலாளர், போக்குவரத்து சம்மேளன குழு உறுப்பினர், இந்திய தொழிற்சங்க மையம் மாவட்ட துணை செயலாளர், கட்சி கிளை செயலாளர் என பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். அவருக்கு சுசிலா என்ற மனைவியும் ஜெரோம், ஜூலியன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.