districts

img

கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா விழுப்புரத்தில் குவியும் திருநங்கையர்கள்

கள்ளக்குறிச்சி, ஏப்.21 - கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, ஏராள மான திருநங்கைகள் அங்கு குவிந்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்நிலையில், திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவியத் தொடங்கியுள்ளனர். முக்கியத் திருவிழாவான சுவாமி கண் திறத்தல் மற்றும் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி ஏப். 23ஆம் தேதியும்  மறுநாள் அரவான் தேரோட்டமும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மும்பை உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலுக்கு வருகை தர உள்ளனர்.  இத்திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உட்பட மூன்று மாவட்டத்தில் இருந்துகூடுதலாக காவலர்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படஉள்ளனர்.  சித்திரை திருவிழாவின் இறுதி நிகழ்ச்சி யான தருமர் பட்டாபிஷேகம் வரும் 26 ஆம் தேதி நடைபெறுகிறது.  அன்றுடன் 18 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது. இதுகுறித்து கூவாகம் பஞ்சாயத்து தலைவர் முருகன் கூறுகையில்: ஆண்டுதோறும்  கூவாகம் திரு விழாவை காண லட்சக்கணக்கில் மக்கள் குவிந்து வரும் நிலையில் சுற்றுலா தளமாக அறிவிக்கப்பட்ட இந்த கோவிலில் நிரந்தரமாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் திருநங்கைகள் தங்குவதற்கான விடுதி வசதி கிடையாது. பொது மக்களுக்கும் நிரந்தர கழிப்பிட வசதி இல்லை. கூவாகம் கூத்தாண்டவர் கோவிலை சுற்றி அடிப்படை வசதிகளை அரசு செய்துதரவேண்டும்.  மக்கள் தங்குவதற்கான அறைகள் கட்டித்தர வேண்டும் என்றார் அவர்.