சென்னை,ஜூன் 11-
சென்னை பேசின்பிரிட்ஜ் -வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையங்கள் இடையே ஞாயிறு முதல் புதன்கிழமை வரை 4 நாட்கள் தண்டவாள பரா மரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படஉள்ளது.
அதன்படி, சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிற்கு இரவு 10.35 மணிக்கு செல்லும் ரயில், ஆவடிக்கு இரவு 11.30 மணிக்கு செல்லும் ரயில்களும், அதேபோல் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து சென்டிரலுக்கு இரவு 11.55 மணிக்கு செல்லும் ரயில் 13-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணத் துக்கு அதிகாலை 1.20 மணிக்கு செல்லும் ரயில், திருவள்ளூரில் இருந்து சென்ட்ரலுக்கு அதிகாலை 4.45 மணிக்கு புறப்படும் ரயில், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து சென்டி ரலுக்கு அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் ரயில், சென்ட்ரலில் இருந்து திருவள்ளூருக்கு அதி காலை 5.40 மணிக்கு புறப்படும் ரயில்கள் திங்கட்கிழமை ரத்து செய்யப்படுகிறது.
ஆவடியில் இருந்து சென்ட்ரலுக்கு அதிகாலை 3.50 மணிக்கு புறப்படும் ரயில், சென்டிரலில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிற்கு அதி காலை 4.15 மணிக்கு புறப்படும் ரயில் வரும் 12 மற்றும் 14-ந்தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து சென்டி ரலுக்கு இரவு 10.45 மணிக்கு செல்லும் ரயில் 13-ந்தேதியும் ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும். சென்ட்ரலிலிருந்து திரு வள்ளூர் அதிகாலை 3.50 மணிக்கு இயக்கப்படும் ரயில் வரும் 14 ஆம் தேதி ஆவடியில் இருந்து இயக்கப்படும். சென்ட்ரலில் இருந்து திருவள்ளூருக்கு அதிகாலை 4.30 மணிக்கு செல்லும் ரயில் வரும் 12 மற்றும் 14 ஆம் தேதி களில் ஆவடியில் இருந்து இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரி வித்துள்ளது.