சென்னை, பிப். 25- அவசர காலங்களில் அடிப்படை உயர் காக்கும் முறைகள் குறித்த பயிற்சித் திட்டத்தை கிளெ னேகிள்ஸ் ஹெல்த் சிட்டி மருத்துவமனை ‘அறி முகம் செய்துள்ளது. குடி யிருப்போர் சங்க உறுப்பி னர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது. விபத்து உள்ளிட்ட பல்வேறு உயிருக்கு ஆபத்தான அவசர காலங்க ளில் உடனடியாக அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து அவர்களின் உயிர்களை காப்பாற்றுவதே இந்தபயிற்சி திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டத்தை கிளெ னேகிள்ஸ் ஹெல்த் சிட்டி மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி டாக்டர் நாகேஷ் ராவ் துவக்கி வைத்தார். அவசர மருத்துவ பிரிவு தலைவர் டாக்டர் ஸ்ரீராம் ராஜாமணி, நிறுவன தொடர்பு தலைவர் பாஸ்கர் ரெட்டி மற்றும் சென்னையில் உள்ள குடி யிருப்பு சங்கங்களின் உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர். இதன் துவக்கமாக, சோழிங்கநல்லூர், பெரும் பாக்கம் மற்றும் மேட வாக்கம் ஆகிய இடங்களில் ஒவ்வொரு சங்கத்திலும் 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு சுமார் 170 குடி யிருப்புச் சங்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு உயிர்காக்கும் அடிப்படை பயிற்சி அளிக்கப் படவுள்ளது. இம்மருத்துவ மனையைச் சேர்ந்த மூத்த மருத்துவ வல்லுநர்கள், இந்த பயிற்சியை வழங்க உள்ளனர்.