திருவள்ளூர், ஆக.4-
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் திருவள்ளூர் மாவட்ட வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் வெள்ளியன்று (ஆக-4), திருவள்ளூரில் நடைபெற்றது. இதில் 180 க்கும் மேற்பட்ட ஆசிரி யர்கள் பங்கேற்றனர்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் சாந்தகுமாரி துவக்கவுரையாற்றினார் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆசிரியர். ஜெயராஜ் வாழ்த்தி பேசினார். முனைவர்.நாராயணி சுப்பிரமணியன் சிறப்பு கருத்தாளராக பங்கேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பி னர் தாளமுத்து நடராசன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செய லாளர் மோசஸ் பிரபு ஆகி யோர் என்சிஎஸ்சி குறித்து விரிவாக பேசினார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
மாவட்ட பொருளாளர் சண்முகம் கலைமகள் பள்ளி யின் தலைமை ஆசிரியர், அறிவியல் இயக்க தன்னார் வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.