districts

img

பெரியபாளையத்தில் போக்குவரத்து நெரிசல்...

பெரியபாளையம்  மேம்பாலத்தில் ஞாயிறன்று  காலை முதல் பகல் 1 மணி வரை போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் ஊத்துக்கோட்டை, ஆரணி , சென்னை வழியாக செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. பெரியபாளையம் பவாணியம்மன் கோயிலுக்கு  ஞாயிறன்று (ஆக-27),ஏராளமான பக்தர்கள் வருகை தந்ததால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. காவல்துறையினர் நெரிசலை சீரமைக்க கடுமையாக போராடினர்.