districts

img

வாய்க்கால் பணியால் போக்குவரத்து பாதிப்பு

விழுப்புரம்,ஆக.9-

     விழுப்புரம் திருவிக மற்றும் காந்தி சிலையில் இருந்து காமராஜர் வீதி வரை சாலையின் இருபுறமும் புதிதாக வடிகால் வாய்க்கால் வெட்டும் பணி ஜூன் மாதம் தொடங்கப்பட்டது.

    இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகள், கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வேறு வழியின்றி அங்குள்ள சாலையில் வழிந்தோடுகிறது. வடிகால் வாய்க்கால் கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் எம் சாண்ட், ஜல்லிக்கற்கள் ஆகியவற்றை சாலை ஓரமாக வாய்க்கால் ஓரமாக கொண்டு வந்து கொட்டி வைத்து பணி களை மேற்கொண்டு வருகின்றனர்.

    திரு.வி.க. வீதியில் பழைய சட்டக்கல்லூரி செயல்பட்ட இடத்தில் அல்லது நகராட்சி பள்ளி மைதானம் செல்லும் வழியில் சாலையோரமாக இவற்றை கொட்டி வைத்து பணிகளை மேற்கொள்ளலாம்.

     ஆனால் அவ்வாறு மேற்கொள்ளாமல் வடிகால் வாய்க்கால் கட்டப்படும் இடத்தின் ஓரமாகவே எம் சாண்ட், ஜல்லிக்கற்கள் ஆகியவற்றை கொட்டி வைத்து பணிகளை மேற்கொண்டு வருவதால், அந்த வழியாக வாகன ஓட்டிகள் சரிவர செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பணியை விரைந்து முடிக்காததால் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.