புதுச்சேரி,ஜூலை.14- புதுச்சேரி குபேர் பெரிய அங்காடி வியாபாரிகள் சட்டப்பேரவை நோக்கி ஊர்வலம் நடைபெற்றது. புதுச்சேரி நகரத்தின் மைய பகுதியில் உள்ள குபேர் பெரிய அங்காடியை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதியதாக கட்டும் பணி நடைபெற உள்ளது. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் பெரிய அங்கா டியை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கட்டுமானப்பணியை பகுதி பகுதியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக் கப்படாமல் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், வியாபாரிகள் சங்கங்கள் சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்தி வந்தனர். நகராட்சியின் திடீர் அறிவிப்பு இந்நிலையில் அரசியல் கட்சி மற்றும் வியாபாரிகளின் கோரிக்கைகளை புறக் கணிக்கும் வகையில் புதுச்சேரி நகராட்சி சார்பில் பெரிய அங்காடியில் திடீரென்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் குபேர் பெரிய அங்காடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டும்பணி துவங்க உள்ளது.
மீன் அங்காடி பகுதி தவிர்த்து மற்ற பகுதி வியாபாரிகளுக்கு தற்காலி கமாக கடலூர் சாலையில் உள்ள ஏ.எப்.டி மைதானத்தில் கொட்டகை அமைக்கப் பட்டுள்ளது. அங்கு வியாபாரம் செய்து கொள்ளும் படி அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. வியாபாரிகள் சாலை மறியல் நகராட்சியின் இந்த அறிவிப்பை கண்டித்தும், குபேர் பெரிய அங்காடியின் கட்டுமானப் பணியை பகுதி பகுதியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து நேருவீதியில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் திமுக, மாநில அமைப்பாளரும், எதிர் கட்சி தலைவர் ஆர்.சிவா, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணை செயலாளர் சேதுசெல்வம் ஆகியோர் பங்கேற்று பேசினர். பின்னர் வியாபாரிகளுடன் ஊர்வலமாக சென்ற தலைவர்கள், சட்டப் பேரவையில் முதல்வர் ரங்சாமியை சந்தித்து முறையிட்டனர். இப்பிரச்சனைகுறித்து அதிகாரிகளை அழைத்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கட்சி தலைவர்க ளிடம் முதல்வர் உத்தரவாதம் அளித்தார். அதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப் பட்டது.இப்போராட்டத்தால் புதுச்சேரி நேருவீதி பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.