districts

img

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து விவசாயிகள் - தொழிற்சங்க சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

வேளாண் விளை பொருட்களுக்கு கூடுதல் விலை வழங்க வேண்டும்,  100 நாள் வேலை திட்டத்தில் 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும், மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொமுச மாவட்ட நிர்வாகி சவுந்தரராஜன் தலைமை தாங்கி னார். ஏஐடியுசி மாவட்ட நிர்வாகி வே. முத்தையன், சிஐடியு நிர்வாகி கள் இரா.பாரி, எம். வீரபத்திரன், சேகர், பாலசுந்தரம், நாகராஜன், வெங்கடேசன், கமலக்கண்ணன், அண்ணாமலை, சிபிஎம் மாவட்ட செயலாளர் எம். சிவக்குமார், வட்டார செயலாளர் ஏ. லட்சுமணன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகம் முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும்  அனைத்து மத்திய தொழிற்சங்கங் கள் கூட்டமைப்பு சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச தலைவர் ஞானப்பிரகாசம் தலைமை தாங்கினார். தொமுச மாவட்ட செயலாளர்கள் சேகர், வேல்முருகன், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.முத்துக்குமரன், மாவட்டச் செயலாளர் ஆர்.மூர்த்தி,  மாவட்ட துணைத் தலைவர் பி.குமார், மாவட்ட துணைச் செய லாளர் எம்.முருகன், தமிழ்நாடு  விவசாயிகள் சங்க மாவட்டத்  தலைவர் ஆர்.தாண்டவராயன், ஐக்கிய விவசாய முன்னணி ஒருங்கிணைப்பாளர் ஏ.சவுரி ராஜன், ஏஐடியுசி மாவட்டச் செயலா ளர் ஆர்.ராஜேந்திரன், இந்து மஸ்தூர் சங்க மாவட்ட தலைவர் சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர் திருப்பத்தூரில் சிஐடியு, தொமுச, ஏஐடியுசி, ஐஎன்டியுசி  ஆகிய மத்திய தொழிற்சங்கங் களின், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பாரத ஸ்டேட்  வங்கி எதிரில் கே.ஆர். வேணு கோபால் (ஏஐடியுசி), கேசவன் (சிஐடியு), கா.தேவராஜ் (தொமுச),  தேவராஜி (ஐஎன்டியுசி) கூட்டு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மு.வீரபாண்டியன் (சிபிஐ),  ஜாபர் சாதிக் (சிபிஎம்), அனு மந்தன், சரவணகுமார்(தொமுச), ெஜயசீலன் (ஐஎன்டியுசி) கலந்து கொண்டு உரையாற்றினர். கடலூர்  அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம்  அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தொமுச மாவட்டச் செய லாளர் பொன்முடி தலைமை தாங்கினார். என்எல்சி தொமுச பொதுச் செயலாளர் பாரி, பேரவை செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன்,  ஜி.ஆர். ரவிச்சந்திரன் ஏஐடியுசி மாவட்டத் தலைவர் குளோப், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மோடி அரசை கண்டித்து நடைபெற்ற இந்த போராட்டத்தில்  பெருந்திரளாக தொழிலாளர் களும், விவசாயிகளும் கலந்து கொண்டனர்.