விழுப்புரம்,அக்.3- விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகே மரக்கட்டைகள் ஏற்றி வந்த டிராக்டர் சாலையின் குறுக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கொய்யா மர கட்டைகளை ஏற்றி கொண்டு ஒரு டிராக்டர் செவ்வாய்க்கிழமை (அக்.3) விக்கிரவாண்டியில் இருந்து முண்டியம்பாக்கம் நோக்கி சென்றது. இந்த டிராக்டரை நாகராஜ் (35) என்பவர் ஓட்டி வந்தார். விக்கிரவாண்டி பேருந்து நிலை யம் அருகே வந்தபோது டிப்பர் ஹைட்ராலிக் பழுது காரணமாக திடீரென மேலே தூக்கியது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. விபத்தில் டிராக்டர் டிரைவர் நாக ராஜூக்கு படுகாயம் ஏற்பட்டது. அவ்வழியே சென்றவர்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவல் அறிந்த விக்கிரவாண்டி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சாலையில் கவிழ்ந்து கிடந்த டிராக்டர் டிப்பரை அகற்றினர். இதனால் விக்கிரவாண்டி பேருந்து நிலைய பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தியது.