சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கல்லூரிக்கு தனி அலுவலரை நியமிக்க வேண்டும், அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும், பணிநீக்கம் செய்யப்பட்ட 11 பேராசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வியாழனன்று (ஜூன் 24) வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் டி.பி.ஜெயின் கல்லூரி கிளைச் செயலாளர் பேரா. கே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் பேசினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.லெனின், தி.நகர் பகுதிச் செயலாளர் இ.மூர்த்தி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.