districts

img

பொதுத் தேர்வில் முதலிடம்: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு

சென்னை,அக்.21-  கும்மிடிப்பூண்டியில்  உள்ள  ஏ.ஆர்.எஸ் குழுமம் சார்பில் பொது தேர்வில் முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் அதனைச்சுற்றி உள்ள பகுதிகளில் ஏ.ஆர்.எஸ் ஸ்டீல்ஸ் அண்ட் அலாய் இன்டர்நேஷனல் தனியார்  நிறுவனம் மற்றும்  ஏ.ஆர்.எஸ் எனர்ஜி நிறுவனம் என அக்குழுமத்தின் கீழ் இயங்கி வரும் தொழிற்சாலைகள் வாயிலாக பல்வேறு சமூகநலப்பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். அந்த வகையில் தொழிற்சாலைகளை சுற்றி உள்ள   சித்தராஜ கண்டிகை, ஈகுவார்பாளையம் மற்றும் மாதர்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள கிராமங்களை சேர்ந்த அரசு பள்ளிகளில் படித்து 2024 ஆம்  கல்வி ஆண்டில்  10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று  இடங்களை பிடித்த மாணவர்களை   தேர்வு செய்தனர். அவர்களை ஊக்குவிக் கும் வகையில் ஏ.ஆர்.எஸ் குழும நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் அஸ்வனி குமார் பாட்டியா, இயக்குநர் ராஜேஷ் பாட்டியா ஆகியோர்  பரிசுத்தொகைக்கான  காசோலைகளை  அளித்து பாராட்டினர். நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநர்கள்  சத்திய நாராயண மூர்த்தி, சேகர், நிதி இயக்குநர் பிரபு, பொது மேலாளர் மீரா ரெட்டி உள்பட பலர் இதில் கொண்டனர்.