சென்னை, ஜூலை 27- இந்தியாவில் முதன் முறையாக செஸ் ஒலிம்பி யாட் போட்டி மாமல்ல புரத்தில் நடைபெறுகிறது. உலக அளவில் நடைபெறும் இந்த போட்டியின் துவக்க விழா வியாழனன்று (ஜூலை 28) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் வெளிநாட்டு வீரர்க ளின் அணி வகுப்பும் நமது பாரம்பரிய கலை நிகழ்ச்சி களும் நடைபெறுகிறது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலு வலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.