ராணிப்பேட்டை, ஜூலை 29 –
ராணிப்பேட்டை எல் எப் சி பள்ளி வளாகத்தில் பணி செய்யும் போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்த இலங்கை தமிழர் பன்னீர்செல்வம் குடும்பத்திற்கு நிவாரணம் தராமல் அலைக்கழிக்கும் போக்கை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனிக்கிழமையன்று (ஜூலை. 29) முத்துக்கடை வேம்புலி அம்மன் கோவில் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிபிஎம் வாலாஜா தாலுகா குழு செயலாளர் ஆர்.மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் என். காசிநாதன், மாவட்ட குழு உறுப்பினர்கள் டி. சந்திரன், பி. ரகுபதி, தா. வெங்கடேசன் ஆகியோர் உரையாற்றினர். உடன் தாலுகா குழு உறுப்பினர்கள் ஜி. குணசேகரன், ஹரி. கார்த்திக், செந்தில், ரவி, ஜான், ஆட்டோ பாபு, நந்தகுமார், செல்வா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பள்ளி நிர்வாகம் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பள்ளி நிர்வாகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி இந்த இழப்பீட்டு தொகையை பெற்றுத் தர வழிவகை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.