districts

கிணற்றில் விழுந்த பெண் ஊழியருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

கொளத்தூர், நவ. 9- மீஞ்சூர் அருகே உள்ள நெய்தவாயல் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (38).  இவர் பெரம்பூரில் உள்ள தனியார் ஏற்றுமதி  ஆடை நிறுவனத்தில் தையல் தொழிலாளி யாக வேலை செய்து வருகிறார்.  செவ்வாயன்று இரவு  வழக்கம் போல் வேலை முடிந்ததும் வீட்டுக்கு செல்ல பேருந்து ஏறுவதற்காக மூலக்கடை வந்தார். பேருந்து  நிலையத்தில் காத்திருந்தபோது இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகில் இருந்த இருட்டான பகுதிக்கு சென்றார். அப்போது அங்கிருந்த சுற்றுச்சுவர் இல்லாத 40 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணற்றில் விஜயலட்சுமி தவறி விழுந்தார். கிணற்றில் தண்ணீர் இல்லாததால் விஜயலட்சுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் வலியில் அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது கிணற்றுக்குள் விஜயலட்சுமி விழுந்து கிடப்பது தெரிந்தது. இதுகுறித்து மாதவ ரம் காவல்நிலையத்திற்கும், தீயணைப்பு  நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது.  ஆய்வாளர் காளிராஜ் தலைமை யில் போலீசாரும், தீயணைப்பு துறை அதிகாரி அரவிந்தன் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி கயிறு கட்டி விஜயலட்சுமியை லாவக மாக மேலே மீட்டு வந்தனர். இதனால்  அங்கிருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர். கிணற்றுக்குள் விழுந்ததில் விஜயலட்சு மிக்கு இடது காலில் முறிவு ஏற்பட்டது. அவர்  ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உள்ளார்.