districts

img

சிஐடியு நடைபயணக்குழுவினருக்கு திருவள்ளூரில் உற்சாக வரவேற்பு

திருவள்ளூர், மே 20-

    இரண்டு ஆண்டுகளில் 480 நாட்கள் பணிப்புரிந்துள்ள தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடை பெற்ற சிஐடியு  நடைபயணத்திற்கு தொழி லாளர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்த னர்.

    திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் காட்டுப் பள்ளி அதானி துறைமுகம் அருகில் சனிக்கிழமையன்று (மே 20) துணைப் பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன் தலைமையில்  துவங்கிய சிஐடியு பிரச்சாரம் காமராஜர் துறைமுகம், வடசென்னை அனல் மின் நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம், அத்திப் பட்டு, மீஞ்சூர், பொன்னேரி, கும்மிடிப் பூண்டி ஆகிய இடங்களில் பிரச்சாரம் நடை பெற்றது.  

   இந்த பிரச்சாரக்குழுவினருக்கு  உள்ளாட்சி ஊழியர் சங்கம், ஆட்டோ தொழிலாளர் சங்கம், ஏஐடியுசி என சகோதர சங்கத்தினர்  உற்சாக வரவேற்பு அளித்தனர்.  இதில் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் என்.நித்தியானந்தம், நரேஷ் குமார்,  ஏ.ஜி.சந்தானம், ஜி.வினாயகமூர்த்தி, எஸ்.எம்.அனீப், வெங்கடேசன், கோபி, ஜெயவேல், சலில்குமார், ஏஐடியுசி மாவட்ட நிர்வாகி பாலன், ஐஎன்டியுசி மாவட்ட செயலாளர் தாமோதரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.