districts

img

செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், ஜூலை 31-

     கும்மிடிப்பூண்டி அடுத்த சிறு புழல்பேட்டை ஊராட்சி முத்துரெட்டி கண்டிகை  கிராமத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

     இந்நிலையில் பொதுமக்கள் வசிக்கும் வீடுகளுக்கு மத்தியில் செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கும்மிடிப் பூண்டி வட்டாட்சியரிடமும், சிப்காட் காவல் நிலையத்திலும் மனு அளித்தனர்.

    ஆனால் செல்போன் கோபுரம் அமைப்ப தற்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில்,  அங்கு வந்த அப்பகுதி பொது மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் எம்.ரவிக்குமார் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     அப்போது பேசிய ஒன்றிய கவுன்சிலர் ரவிக்குமார் 6 ஆன்டெனாக்கள் பொருத்திய செல்போன் கோபுரம் அமைப்ப தற்கு வீடுகள் குறைந்தபட்சம் 45 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும் என்ற அரசின் வழிகாட்டு விதிமுறைகள் இருக்கும் நிலையில்,  மேற்கண்ட இடத்தில் செல்போன் கோபுரமானது  குடியிருப்புகளுக்கு  மத்தியில் 3மீட்டர் தொலைவிலேயே அமைக்கும் பணி நடை பெற்று வருவதாக குற்றச்சாட்டினார்.

   இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி கால்நடை களும் பெரிதும் பாதிக்கப்படும் என்பதால் அங்கு செல்போன் கோபுரத்தை  அமைக்க கூடாது என கண்டனம் தெரிவித்தார்.

    தொடர்ந்து கும்மிடிப்பூண்டி போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறி வித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.இதில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் சங்கர், சிஐடியு ஒன்றிய பொருளாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.