திருவண்ணாமலை, அக்.30- சித்தூர் அடுத்த மதன பள்ளியில் உள்ள கல்குவாரி யில் கொத்தடிமைகளாக அடைத்து வைத்துள்ள வர்களை மீட்க கோரி செய்யாறு கோட்டாட் சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதன் விவரம் வரு மாறு:- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், வெளியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த காளியம்மாள் குடும்பத்தி னர் செய்யாறு கோட்டாட்சி யர் அனாமிகாவிடம் கோரிக்கை மனு அளித்த னர். அதில், எனது கண வர் சந்திரசேகர் (50), தெய்வானை (32) மகள், ராமன்(30) லட்சுமணன்(29) மகன்கள் கல் உடைக்கும் தொழில் செய்து வரு கின்றனர். இதில் காளியம்மாளின் கணவர் சந்திரசேகர், மகன்கள் ராமன், லட்சு மணன் மற்றும் மருமகன் ராமகிருஷ்ணன் ஆகியோர் கடந்த ஒரு ஆண்டாக சித்தூர் அடுத்த மதன பல்லியில் உள்ள ஒரு கல்கு வாரியில் கல் உடைக்கும் வேலை செய்து வரு கின்றனர். இந்த நிலையில் மகள் தெய்வானைக்கு மரு மகன் ராமகிருஷ்ணன் போன் செய்து, எங்களை கல்குவாரியில் உள்ள ஒரு தனி அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்கின்றனர். ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் வெளியே அனுப்பு வோம். இல்லை என்றால் இங்கேயே கொத்தடி மைகளாக கல் உடைக்க வேண்டும் என்று கல்குவாரி உரிமையாளர் வேணு என்பவர் கொலை மிரட்டல் விடுப்பதாக தெரி வித்திருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சிய டைந்த காளியம்மாள், கல்குவாரியில் கொத்த டிமைகளாக உள்ளவர் களை மீட்க வேண்டும் என செய்யாறு கோட்டாட்சிய ரிடம் கோரிக்கை மனு அளித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், வட்டார செயலாளர் அப்துல்காதர், செயற்குழு உறுப்பினர் ப.செல்வன், இடைக்குழு உறுப்பினர்கள் யாசர் அராபத், சிவக்குமார், வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர். கல்குவாரியில் உள்ள வர்களை மீட்க உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் உறுதி யளித்துள்ளார். மேலும், இது குறித்து காளியம்மாள் குடும்பத்தினர், வந்தவாசி துணை காவல் கண் காணிப்பாளரிடமும், புகார் மனு அளித்துள்ளனர்.