districts

img

பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி மலைவாழ் மக்கள் போராட்டம்

கள்ளக்குறிச்சி,ஜூலை 23-

     கல்வராயன் மலை வட்டம், தொர டிப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் வெள்ளி மகன் ஆண்டி என்பவர் மீது வெள்ளிமலை வனத்துறை அலு வலர்கள் தொடுத்த பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து போராட் டம் நடத்தியது,

   வெள்ளிமலை வனத்துறை அலு வலகத்தை முற்றுகையிட்டு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெள்ளி மலை ஒன்றிய செயலாளர் வி.அண்ணா மலை தலைமை தாங்கினார்.

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி. டில்லிபாபு (மலைவாழ் மக்கள் சங்கம்),  டி.எம்.ஜெய்சங்கர், டி.ஏழுமலை, வே.ஏழுமலை(சிபிஎம்), எ.பொன்னு சாமி,  எ.செல்வராஜ், எம்.கிருஷ்ண மூர்த்தி சின்னமணி (மலைவாழ் மக்கள் சங்கம்) உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

   போராட்டத்திற்கு பின்னர் நடை பெற்ற பேச்சு வார்த்தையில் கள்ளக் குறிச்சி காவல்துறை அதிகாரிகள் ரமேஷ், ரவிச்சந்திரன் வனத்துறை வரு வாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    வனத்துறை அதிகாரிகளால் போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெறுவது எனவும் அனுபவத்தில் உள்ள வருவாய் தரிசு நிலத்தை அவர்களுக்கே பட்டா வழங்கிட உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர்.