குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகளை சீரமைக்க வேண்டும், மின் அழுத்த குறைபாடுகளை நீக்கி சீரான மின் விநியோகம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மணலி எம்.ஜி.ஆர். நகரில் பகுதிக்குழு உறுப்பினர் மோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.சண்முகம், எஸ்.ராணி, பகுதிச்செயலாளர் பாபு, நிர்வாகிகள் முருகன், லட்சுமணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.