திருவள்ளூர், ஆக.12-
அதானி துறைமுக விரிவாக்க திட்டத் தால் பொன்னேரி, பழவேற்காடு, கும்மிடிப் பூண்டி ஆகிய பகுதிகளில் மீனவர்கள் மற்றும் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதை தடுக்க வரும் கிராம சபை கூட்டங்களில் அந்தந்த ஊராட்சிகளில் தீர்மானம் நிறை வேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து கட்சியின் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கடிதம் வழங்கப்பட்டது. பொன்னேரி அருகே, காட்டு பள்ளியில் எல் அண்ட் டி நிறுவனம் துறைமுகம் அமைந்துள்ளது. இதனிடையே இந்த துறைமுகத்தை அதானி நிறுவனம் இன்ப்ராஸ்டிரக்சர் டெவலப்மென்ட் என்ற பெயரில் துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அதற்காக ரூ.53 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்காக தமிழ்நாடு அரசு 2021 ஆம் ஆண்டு ஜனவரி 22 அன்று மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்திட ஏற்பாடு செய்தது. அனைத்து கட்சிகள் மற்றும் சமூக ஆர்வ லர்கள் எதிர்த்ததின் விளைவாக அந்த கூட்டத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது.
அதானி துறைமுக விரிவாக்கத்திற்காக பொன்னேரி வட்டம் காலாஞ்சி கிராமத்தில் நிலம் கையகப்படுத்திட செப்டம்பர் 5ஆம் தேதி கும்மிடிப்பூண்டியில் கருத்து கேட்புகூட்டத்தை நடத்திட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தகூட்டத்தையும் தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக திருவள் ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு சார்பில், திருவள் ளூர் மாவட்ட கடற்கரையோரம் அமைந்துள்ள பழவேற்காடு, லைட் அவுஸ் குப்பம், ஆரம்பாக்கம், கள்ளூர், மெத்தூர் சுண்ணாம்பு குளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் அதானி துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படக்கூடாது எனவும் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த கூடாது எனவும் அந்தந்த ஊராட்சிகளில் வரும் கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.விஜயன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.எம்.அனீப், பி.கதிர்வேலு, பொன்னேரி பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர், மீஞ்சூர் பகுதி செயலாளர் இ.ஜெயவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.