பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,தினக்கூலி ஊதிய நியமனங்களை கைவிட, அனைத்து ஒப்பந்த, அவுட் சோர்சிங் முறைகளை, தினக்கூலி நியமனங்களை கைவிட்டு அனைத்து வகையான ஒப்பந்த ஊழியர்களையும் முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் சந்திரன், கல்யாணசுந்தரம், நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.