விழுப்புரம், நவ. 4- உளுந்தூர்பேட்டை மற்றும் திருமாந்துறை சுங்கச்சாவடிகளில் பணி நீக்கம் செய்யப்பட்ட 56 ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங்கிடம் மக்க ளவை உறுப்பினர்கள் தொல்.திரு மாவளவன், துரை.ரவிக்குமார் ஆகியோர் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஒன்றிய அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து துரை.ரவிக் குமார் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:- தமிழகத்தில் தேசிய நெடுஞ் சாலைகளில் 48 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இந்த சுங்கச்சாவடிகள் ஒன்றிய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நாகாய் 27 திட்டங்களாகப் பிரிக்கப்பட்டு கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு ஒப்பந்தம் விடப்பட் டுள்ளன. ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனங்கள் அவுட்சோர்சிங் முறையில் துணை ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் 10 முதல் 15 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரியும் தொழிலாளர்கள் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக் குறிச்சி மாவட்டம் செங்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் பணிபுரிந்த 56 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உதவி தொழிலாளர் ஆணை யர் உத்தரவிலும், கோட்டாட்சியர் உடன் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தி லும், தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்றும், தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்றும் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் இதுவரை அவர்களுக்கு பணி வழங்க வில்லை. பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் தொடர்ந்து போராடி வருகின்ற னர். எனவே அமைச்சர் தலை யிட்டு, சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்ட 56 தொழி லாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.