districts

டி.பி.ஜெயின் கல்லூரியை கையகப்படுத்த வேண்டும் உயர்கல்வித்துறை செயலாளரிடம் மாணவர் சங்கத்தினர் மனு

சென்னை, ஜூன் 21 - துரைப்பாக்கம் டி.பி.ஜெயின் கல்லூரியை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் கோரி உள்ளது. சென்னை, துரைப்பாக்கத்தில், அரசு உதவி பெறும் டி.பி.ஜெயின்  கலை மற்றும் அறிவியல் கல்லூரி  உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக  அரசு உதவிபெறும் பாடப்பிரிவை யும், சுயநிதிப் பாடப்பிரிவாக மாற்றி அதீத கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. 2020-21ஆம் ஆண்டு முதல் அரசு உதவி பெறும்  பாடப்பிரிவில் மாணவர் சேர்க் கையை நிறுத்தியுள்ளது. பணி நிறைவு பெறும் பேராசிரியர்களின் இடத்தில் புதிய ஆசிரியர்களை நியமிப்பதையும் கைவிட்டுள்ளது. இந்நிலையில் உயர்கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயனை செவ்வாயன்று (ஜூன் 21) தலைமை  செயலகத்தில் சந்தித்து இந்திய  மாணவர் சங்கத்தின் தென்சென்னை  மாவட்டத் தலைவர் ஆனந்த், செய லாளர் ஆர்.பாரதி, துணைச்செயலா ளர் புகழ்ச்செல்வி ஆகியோர் மனு அளித்தனர். அதில், கடந்த 2 ஆண்டுகளாக அரசு உதவிபெறும் பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை நடத்தாமல் இருப்பதை சென்னை பல்கலைக் கழகம் விசாரிக்காதது ஏன்? கல்லூரி கல்வி இயக்குநர் இது குறித்து விசாரிக்காதது ஏன்? சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் கல்லூரிக்கு பல்கலைக் கழகம் எப்படி அனுமதி கொடுத்து வருகிறது என்பது குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும். இந்தாண்டுக்கான மாணவர் சேர்க்கை உடனடியாக நடத்துவதை உயர் கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று வலியு றுத்தி உள்ளனர்.

சிபிஎம் கண்டனம்
இதனையொட்டி, கல்லூரி வாயிலில் மாணவர் சங்க நிர்வாகி கள் ஆனந்த், ஆர்.பாரதி உள்ளிட் டோர் துண்டு பிரசுரங்களை விநியோ கித்தனர். அதற்கு, கல்லூரி நிர்வாகம்  எதிர்ப்பு தெரிவித்தது. இதனைய டுத்து அங்கு வந்த காவலர்கள், மாணவர் சங்க நிர்வாகிகளை அச்சுறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மிரட்டியுள்ளனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில், துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பது ஜனநாயக உரிமை. அதற்கு காவல்துறை அனுமதி  பெற வேண்டும் என்று கூறுவது  சட்ட விரோதமானது. இந்த விவகா ரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கடந்த ஜூன் 4ந் தேதி உயர் கல்வித்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதனடிப் படையில் கல்லூரியை அரசு கையகப்படுத்த வேண்டும். காவல்துறையின் அத்துமீறலை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.