வடசென்னை மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் திருவிக நகர் பகுதியில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். இதில் மேயர் ஆர்.பிரியா, பகுதிச் செயலாளர்கள் செ.தமிழ்வேந்தன், சாமிக்கண்ணு, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெ.டில்லிபாபு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், பகுதிச் செயலாளர் வி.செல்வராஜ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.