districts

img

குடியிருப்புகளை அகற்றும் பிரச்சனையில் நீதிமன்றத்தில் வலுவாக வாதாட வேண்டும்

“ஏரிகளுக்குள் கட்டப்பட்ட நீதிமன்றங்களில் இருந்து கொண்டு, பயன்பாட்டை இழந்த நிலங்களில் வசிப்போரை, நீர்நிலை என்று கூறி அகற்ற நீதிபதிகள் உத்தர விடுகின்றனர். சென்னை நகரில் தினசரி குடியிருப்புகளை அகற்ற நோட்டீஸ் கொடுத்துக்  கொண்டே இருக்கின்றனர். தற்போது மக்கள் வசிக்கும் இடங்கள் ஆக்கிரமிப்புகள் என்றால், அந்த இடங்களை ஒதுக்கீடு செய்த அதிகாரிகளைத்தான் கைது செய்ய  வேண்டும். ஆகவே, தற்போதுள்ள நீர்நிலைகளை பாதுகாத்துக் கொண்டு, பயன்பாட்டை  இழந்த நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க வேண்டும்” என்றார் வேல்முருகன்.

சென்னை, மே 3 - குடியிருப்புகளை அகற்றும் விவகாரத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் எதிர்த்து வலுவாக அரசு   வாதாட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தினார். குடிமனை பட்டா வழங்க வலி யுறுத்தி செவ்வாயன்று (மே 3)  மதுரவாயலில் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின்  மதுரவாயல் பகுதிக்குழு சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் டி.கே. ரங்கராஜன் பேசியதன் சுருக்கம் வருமாறு:

நீர்நிலை பாதுகாப்பு என்ற பெயரில் பொதுநல வழக்கு தொடுத்த வர்கள் பாஜக-வினராக உள்ளனர். இத்தகைய வழக்குகளில் என்ன பொதுநலன் உள்ளது என்று நீதிபதி கள் கவனிக்க வேண்டும். 25  வருடங்களுக்கு முன்பு 3 கோடியாக  இருந்த தமிழக மக்கள் தொகை  தற்போது 7 கோடியை தாண்டி யுள்ளது. இதன் காரணமாக நகரம் வளர்கிறது. நகர கட்டமைப்பு முறையாக இல்லாததால் மக்கள் ஆங்காங்கே குடியேறுகிறார்கள். அனைத்து ஆவணங்களையும் வைத்துள்ள மக்களிடம் குடி மனைப்பட்டா மட்டும் இல்லை. வாக்காளர் பட்டியலில் ஒருவர் பெயர் இடம் பெறும்போது, அந்த  வசிப்பிடம் அவருக்கு சொந்தம் தானே? நீட், ஆளுநர் அத்துமீறல் எதிர்ப்பு, மாநில உரிமை பாதுகாப்பு போன்றவற்றில் திமுக-வை  ஆதரிக்கிறோம். இந்த அரசு நீடிக்க வேண்டும். இம்மக்களுக்கு  பட்டா கிடைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மக்கள்  நலன் சார்ந்து செயல்பட வேண்டும். மக்களின் குரலை  ஆட்சியாளர்களும், நீதிமன்றங்க ளும் புரிந்து கொள்ள வேண்டும். நீதிமன்றத்தின் மாண்புகளை காக்கும் வகையில் நீதிபதிகள் செயல்பட வேண்டும். திராவிடர் களை வெளியேற்றிவிட்ட பிறகு என்ன மாடல் இருக்கும்? மக்கள் இல்லாத  மாடல் என்ன மாடல் அது? எனவே, நீண்ட காலம் குடியிருக்கும் மக்க ளுக்கு தமிழக அரசு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்.வேல்முருகன்

கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல் முருகன் பேசுகையில், “சென்னை யில் 250 ஏரிகள் வரை இருந்தது. நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டுமென்றால் சென்னை நகரை பெயர்த்து வேறு இடத்திற்குதான் கொண்டு செல்ல வேண்டும். 5 ஆண்டுகள் அறுவடை நடைபெறாத நிலங்களை வகைமாற்றம் செய்து குடியிருப்பு பகுதியாக மாற்ற சட்டம் உள்ளது. ஆடு, மாடு மேயாத  சென்னை நகரில் மேய்க்கால் புறம்போக்கு நிலம் எதற்கு? ஆகவே, பயன்பாட்டை இழந்த  நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு வகைமாற்றம் செய்து குடிமனைப் பட்டா வழங்க சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும்” என்றார்.

ஏ.பாக்கியம்

மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம் பேசுகையில், “சென்னை யில் 50 விழுக்காடு குடும்பங்கள் குடிமனைப்பட்டா இல்லாமல் உள்ளன. இதை சரி செய்ய வேண்டும். குடியிருப்புகளை அகற்றும் நீதிமன்றம், அரசு உத்தர வுகளை எதிர்கொள்ள ஒற்றுமையை பலப்படுத்துவோம்” என்றார். மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட அனைத்துவகை அரசு நிலங்களில் குடியிருப்போருக்கும் நிலவகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும், குடிசைமாற்று வாரி யம், வீட்டுவசதி வாரிய ஒதுக் கீடுதாரர்களுக்கு கிரயப்பத்திரம் வழங்க வேண்டும், சமய நிலங்க ளில் வசிப்போருக்கு, குடியேறிய காலத்தில் இருந்த வழிகாட்டு மதிப்பீட்டின் அடிப்படையில் பட்டா வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டிற்கு பகுதிச் செயலாளர் வி.தாமஸ் தலைமை தாங்கினார். மாவட்டச்செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், மாவட்டக்குழு உறுப்பி னர் எஸ்.சரவணச்செல்வி, பகுதிக் குழு உறுப்பினர் கே.ரமேஷ், 146ஏ  ஸ்ரீலட்சுமி நகர் கிளைச் செயலாளர் ஜெ.பழனி உள்ளிட்டோர் பேசினர்.