சென்னையில் காய்ச்சல் அதிகரித்து வருவதையொட்டி திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டு ராமநாதபுரத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் வழங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், பகுதிக் குழு உறுப்பினர்கள் அலமேலு, வெங்கடைய்யா, கிளைச் செயலாளர்கள் குமார், விமலா ஆகியோர் கலந்து கொண்டனர்.