பெருநகர சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4வது வார்டு ராமநாதபுரம் நடுநிலைப் பள்ளியில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார். 10ஆவது வார்டு சன்னதி தெருவில் உள்ள பள்ளியில் மண்டல தலைவர் தி.மு.தனியரசு துவக்கி வைத்தார். 4வது வார்டு எர்ணாவூர் துவக்கப் பள்ளியில் மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் துவக்கி வைத்தார். இதில் மண்டல அலுவலர் ரவிந்திரன், செயற்பொறியாளர் தணிகைவேல் உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், தலைமை ஆசிரியர் முத்துசெல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.