திருவண்ணாமலை, செப்.6- திருவண்ணாமலையில் உழவர் சந்தை திட்டம் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் தொடங்கி 25 ஆண்டு நிறைவு செய்ய உள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை உழவர் சந்தையில் வேளாண்மை துணை இயக்குநர் எஸ்.ஷாமிலா ஜெயந்தி ஆய்வு செய்தார். அப்போது குளிர்பதன கிடங்கு. மின்னணு பெயர் பலகை மற்றும் எடை தராசு. குடிநீர் வசதி. கழிவறை வசதிகள் மற்றும் அலுவலக கோப்புகளை ஆய்வு செய்தார். மேலும், விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார். திருவண்ணாமலை உழவர் சந்தை தொடங்கி 25 ஆண்டு நிறைவு பெற்று வெள்ளி விழாவுக்கு தயாராகி வருவதால் அதற்கு தகுந்த நட வடிக்கைகளை மேற்கொள்ள உரிய அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின் போது உதவி வேளாண்மை அலுவலர் வி.சிவகுருநாதன் உடனிருந்தனர்.