districts

img

சட்ட விரோதமாக இயங்கும் நல்லூர் சுங்கச்சாவடியை இழுத்து மூடவேண்டும் !

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் வரிசை எண்ணில் முதலாவது உள்ள  தொகுதி திருவள்ளூர்.  விவசாயிகள், தொழிலாளர்கள் நிறைந்த தொகுதியாக இது உள்ளது.தமிழ்நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள திருவள்ளூர் தொகுதி திருபெரும்பதூர்  தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தது. 2008 ஆம் ஆண்டு திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியாக உருவானது. திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மாதவரம், பூந்த மல்லி, ஆவடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை இந்த தொகுதி உள்ளடக்கியது. இதில் பொன்னேரி மட்டும் காங்கிரஸ் வசம் உள்ளது. திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, மாதவரம், பூந்தமல்லி, ஆவடி ஆகிய 5 சட்ட மன்ற தொகுதிகள் திமுக வசம் உள்ளது. 2009 ஆம்  ஆண்டு திருவள்ளூர் தொகுதிக்கு நடைபெற்ற முதல் தேர்தலில் அதிமுகவின் சார்பில் போட்டியிட்ட பி.வேணுகோபால் வெற்றி பெற்றார்.  2014 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட்ட வேணுகோபால் வெற்றி பெற்றார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட முனைவர் ஜெயக்குமார் வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் ஜெயக்குமார் 7.67 லட்சம்  வாக்குகளை பெற்றார். மூன்றாவது முறையாக அதிமுகவின் சார்பில் போட்டியிட்ட வேணுகோபால் 4.10 லட்சம் வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.

20.57 லட்சம் வாக்காளர்கள் 

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் ஆண்கள் 10 லட்சத்து 10 ஆயிரத்து 768 வாக்கு களும் , பெண்கள் 10 லட்சத்து 46 ஆயிரத்து 755 வாக்குகளும், மூன்றாம் பாலித்தவர்கள் 373 வாக்குகள் என மொத்தம்  20 லட்சத்து 57 ஆயிரத்து 896 வாக்குகளாகும். ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்தங்கிய தொகுதி

சென்னையை ஒட்டியுள்ள தொகுதியாக இருந்தாலும், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி  வளர்ச்சியில் பின்தங்கிய நிலையில் தான் உள்ளது. ஒன்றிய மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வல்லூர் அனல் மின் நிலையத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக 2000 தொழிலாளர்கள் இன்னும் ஒப்பந்த தொழிலாளர்களாகவே பணியாற்றி வருகின்றனர். வல்லூர் அனல் நிலையத்தில் கழிவாக வெளியேற்றப்படும் சாம்பல் விற்ற வகையில், ஆயிரம் கோடி ரூபாய் கைவசம் உள்ளது. ஒன்றிய  அரசின் உத்தரவுப்படி அப்பணத்தை அப்பகுதி வாழ் மக்களுக்கு சுகாதாரம், சாலை வசதி, குடிநீர் போன்ற அவசிய தேவைகளுக்கு பயன்படுத்த  வேண்டும். அதே போன்று தான் வடசென்னை அனல் மின் நிலையம் 1, 2, 3 ஆகிய மூன்று அலகுகளில் வெளியேற்றப்படும் சாம்பலை விற்பதன் மூலம் மின்சாரம் வாரியம் ரூ.2000 கோடி வருமானத்தை ஈட்டி கொண்டிருக்கிறது ஆக இந்த ரூ.3000 கோடி பணத்தையும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு செலவு செய்திட வேண்டும்.

அதானிதுறைமுகத்தின் சட்டமீறல்கள் 

அதானி துறைமுகத்தை தடுத்து நிறுத்த வேண்டும். கடல் நீரை சில தொழிற்சாலைகள் மாசுபடுத்துவதால்,   மீன்கள் வளர்ச்சி குறைகிறது. கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகிறது. நிலத்தடி நீர் மாசு அடைகிறது.  தேசிய பசுமை தீர்ப்பாயம்,  மக்களை பாதுகாப்பதற்காக ஒரு  தொகையை உருவாக்கிட வேண்டும் என்று உத்தரவிட்டதில்,  இந்த மூன்று அனல் மின் நிலை  யங்களும் அடங்கும். இவைகள் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கிறது. அதானி துறைமுகம்,  எல்என்டி கப்பல் கட்டும்  தளம் இவைகளின்  வளர்ச்சியினால் அப்பகுதி மக்கள் தங்கள் குடும்பங்களை,  வீடுகளை இழந்து,  வேலையும் இழந்து வருமானம் இன்றி,  நோய் வாய்ப்பட்டு  இறப்பது தொடர்கிறது. மீனவர் களை, மீன் வளத்தை பாதுகாக்க அதானி துறைமுகத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.

நசிந்துவரும் சிறுதொழில்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, காக்களூர் ஆகிய இடங்களில் சிப்காட்   அமைந்துள்ளது. இதில் பல தொழிற்சாலைகள் பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியாத சூழலை  ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி போன்ற தவறான பொருளாதார கொள்கைகளால் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிறு, குறு தொழிற்சாலைகள் பாதிக்கிறது. எனவே சிறு குறு நடுத்தர தொழில்களை பாதுகாக்கும் அரசு மத்தியில் அமையவேண்டும் என்று உற்பத்தியாளர்கள் விரும்புகிறார்கள்.

மீனவர்கள், விவசாயிகளுக்கு  எதிரான மோடி அரசு

பழவேற்காடு முதல் சுண்ணாம்பு குளம், மெதிப்பாளையம் வரை 13 ஊராட்சிகளில் புதியதாக சாலைகள், அடுக்கு மாடி கட்டடங்கள், பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகள், தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்கக் கூடாது என மீனவர்களை,  விவசாயிகளை பாதிக்கும் ஒன்றிய அரசின் வனத்துறை சட்டம்,  அரசு ஆணை எண் 1247 ஐ ரத்து செய்ய வேண்டும்,

பெயரளவில் உள்ள பறவைகள் சரணாலயம்

மழை, வெள்ளம், போன்ற பேரிடர்களால் மணல் திட்டுகளாக மாறி வறண்டுப்போன  இந்தியாவின் மிகப்பெரிய உவர்நீர் ஏரியான,  பழவேற்காடு ஏரியை பிரிட்டிஷார் காலத்தில் தூர் வாரப்பட்டது.  பழவேற்காடு ஏரியை தற்போது தூர்வாரி மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும், ஏரியில்  உவர்நீர் இன்றி வறட்சியாக உள்ளதால் உணவின்றி வெளிநாட்டு பறவைகளும், உள்நாட்டு பறவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மோடி அரசில் பறவைகள் கூட நிம்மதியாக வாழமுடியவில்லை.

 திருவள்ளூர், கும்மிடிப்பூண்டியில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும்

திருவள்ளூர் தலைநகரத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும்.  கும்மிடிப் பூண்டியில் சிப்காட் இயங்கி வருவதால் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் மற்றும்  வணிக பெருமக்கள் நலனுக்காக கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்திலும் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும். கும்மிடிப்பூண்டி- சென்னை இடையே 4 வழி இரும்பு பாதையை அமைக்க வேண்டும். கரும்பு விவசாயிகள், விவசாய தொழி லாளர்கள் என 10 ஆயிரம் குடும்பங்களை பாது காக்கும் வகையில் திருவாலங்காட்டில் அமைந் துள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை  மேம்படுத்திட ஒன்றிய பாஜக அரசு ரூ.192 கோடி  நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி யும் கிடப்பில் உள்ளது. மாவட்டத்தில் உள்ள நெல்  கொள்முதல் நிலையங்களை கூடுதலாக வேண்டும்.  சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை யில் செங்குன்றத்தில் இருந்து  கும்மிடிப்பூண்டி வரை  28.4. கி.மீ தூர சாலை மிக மோசமான  நிலையில் உள்ளது. இதனை ஒன்றிய அரசின்  தேசிய நெடுஞ்சாலைத்துறை கண்டுகொள்ள வில்லை. இதனால் அந்த சாலை வழியாக  செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும்பாதிக்கப் படுகிறார்கள். இதில் ஜனப்பசத்திரம் கூட்டுச் சாலை, கவரைப்பேட்டை,  அழிஞ்சிவாக்கம் ஆகிய இடங்களில் உயர்பாலங்கள் அமைக்கும் பணிகளும்,  குறுக்கு பாலங்கள் கட்டுமானப் பணி களும் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள் ளது. இந்த பணிகளை முடிக்க தேசிய நெடுஞ் சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை. சோழவரம் அருகே சட்ட விரோதமாக இயங்கும் நல்லூர் சுங்கச்சாவடி ரத்து செய்ய வேண்டும்.

நலிந்துவரும் நெசவுத்தொழில் 

கைத்தறி நெசவு தொழில் அழிவின் விளிம்பில் உள்ளது.கைத்தறி ரகங்களை ஒன்றிய அரசு கொள்முதல் செய்து விற்பனையை அதிகரிக்க வேண்டும்,  ஜிஎஸ்டி வரிவிதிப்பால் விசைத்தறியும்  நலிவுற்ற நிலையில் உள்ளது. இப்பகுதியில் ஜவுளி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதியில், இருளர் இன மக்கள் மேம்பாட்டிற்கு ஒன்றிய அரசு சிறப்பு திட்டங்களை கொண்டுவர வேண்டும். இப்படி ஏராளமான கோரிக்கைள் இந்த தொகுதியில் உள்ளன. கடந்த 10 ஆண்டு மோடி ஆட்சியில் தொகுதி  மக்களுக்கு உருப்படியான எந்த பணியையும் நிறைவேற்றவில்லை.  இந்தியா கூட்டணி வெற்றி  பெற வேண்டும், அதற்காக திருவள்ளூர் மக்கள வைத் தொகுதியில் போட்டியிடும்  காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை வெற்றி பெற  செய்வதின் மூலம் தொகுதிக்கு விடிவு காலம்  பிறக்கும் என மக்கள் ஆவலுடன் காத்திருக் கிறார்கள். 

- பெ.ரூபன்