திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அடுத்த கடலோரப் பகுதிகளான பழவேற்காடு, லைட் ஹவுஸ், காட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சாகர் கவாச் ஒத்திகை செவ்வாயன்று (நவ 15) நடைபெற்றது. இதில் கடற்படை, கடலோர காவல்படை, மரைன் போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படை, கியூ பிரிவு, ஒன்றிய-மாநில உளவுத்துறை காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு துறையினரும் ஈடுபட்டனர்.