விழுப்புரம்,ஆக.20-
பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரம் - திருப்பதி முன்பதிவில்லா விரைவு ரயில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தெற்கு-மத்திய ரயில்வேயின் குண்டக்கல் கோட்டத்துக்குள்பட்ட பகுதியில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக, விழுப்புரத்தில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்படும் விழுப்புரம் - திருப்பதி முன்பதிவில்லா விரைவு ரயில் (வண்டி எண் 16854), காட்பாடி - திருப்பதி இடையே ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் காட்பாடியில் நிறுத்தப்படும்.
எதிர் வழித்தடத்தில் திருப்பதியிலிருந்து பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்படும் திருப்பதி - விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு ரயில் (வண்டி எண் 16853) திருப்பதி - காட்பாடி இடையே ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.40 மணிக்கு விழுப்புரம் புறப்படும் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.