சென்னை, ஜன,5- ஸ்ரீராம் இலக்கியக் கழகம், தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக திருக்குறள் பேச்சுப் போட்டியை நடத்தியது. ‘இடைநிலைப் பிரிவு (6-8 ஆம் வகுப்பு)’, ‘மேல்நிலைப் பிரிவு (9-12 வகுப்பு)’, ‘கல்லூரிப் பிரிவு’ என மூன்று பிரிவுகளில் திருக்குறள் பேச்சுப் போட்டியை மாநில அளவில் நடத்தியது. இதில் மொத்தம் 4816 மாணவர்கள் கலந்து கொண்டனர். சென்னை, வேலூர், தாம்பரம், புதுச்சேரி, தஞ்சாவூர், திருவாரூர், சேலம், திருச்சி, நெல்லை, மதுரை, ஈரோடு, மற்றும் கோவை ஆகிய 12 மண்டலங்களில் கால் இறுதி மற்றும் அரை இறுதிச் சுற்றுகள் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற்றன. இவற்றிற்கான இறுதிச் சுற்று அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அரை இறுதிச் சுற்றில் வெற்றி பெற்ற 36 போட்டியாளர்கள் (ஒவ்வொரு பிரிவிலும் ஒருவர் என 12 மண்டலங்களைச் சேர்ந்த வெற்றியாளர்கள்) இறுதிச் சுற்றில் பங்கேற்றனர். சென்னை, முகப்பேரில் இயங்கி வரும் டி.ஏ.வி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி செ. ஷிவானி மேல்நிலைப் பிரிவில் இரண்டாம் பரிசை வென்றார்