districts

img

இந்தியா கூட்டணி வெற்றிக்கு கட்டியம் கூறிய திருவண்ணாமலை

திருவண்ணாமலை, மார்ச் 22- திருவண்ணாமலை, திருக்கோவிலூர் சாலையி லுள்ள  திமுக அலுவலகத் தில் திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதி, இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் வியா ழனன்று நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் திருவண்ணாமலை தொகுதி, திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை மற்றும் ஆரணி தொகுதி திமுக வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகி யோரை அறிமுகப்படுத்தி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியபோது, திருவண் ணாமலை மற்றும் ஆரணி  தொகுதிகளில் இந்தியா  கூட்டணி சார்பில் திமுக  வேட்பாளர்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ். தரணி வேந்தன்  ஆகியோரின் பெருவாரி யான வெற்றிக்கு தோழ மைக் கட்சியினர் அனை வரும் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.   முன்னதாக திருவண் ணாமலை தொகுதி வேட்பாளர் சி.என்.அண்ணா துரை பேசியபோது, கடந்த 5 ஆண்டுகளில்,  ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப் பினர்களால்  செய்ய முடி யாத வகையில் எண்ணற்ற  பணிகளை எதிர்க்கட்சி மக்களவைத்தொகுதி உறுப்பினராக இருந்து செய்திருக்கிறேன். இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். இந்த முறை என்னை  வெற்றிபெற வைத்தால் சிறப்பான நாடாளுமன்ற உறுப்பினராக செயல்படு வேன் என்று தெரிவித்தார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச் சாண்டி, திமுக மருத்துவ ரணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி,  சிபிஎம் மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார், செயற் குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், திமுக மாவட்ட  பொருளாளர் எஸ்.பன்னீர் செல்வம், மாவட்ட துணை  செயலாளர் பிரியா ப.விஜயரங்கன், நகர செய லாளர் ப.கார்த்திவேல் மாறன், காங்கிரஸ், சிபிஐ, மதிமுக, முஸ்லீம் லீக், மக்கள் நீதிமய்யம், தலித் விடுதலை இயக்கம்  உள் ளிட்ட கூட்டணி கட்சி  நிர்வாகி கள் பங்கேற்று பேசினர்.