திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவித்த தின கூலியை வழங்கக் கோரி டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் மோவிஸ் ஆரோக்கியராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பி. கணபதி, சிஐடியு மாவட்டச் செயலாளர் பாரி, மாவட்ட துணைச் செயலாளர் சேகர் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.