திருவண்ணாமலை, ஜன.28- திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பஜார் வீதியில், கல்வி தந்தை சுவாமி சகஜானந்தா பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கருத்தரங்கம் நடை பெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட துணை தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் அனைத்து சமுதாய மாணவர்களுக்கும் கல்வி வழங்கும் நோக்கில் நந்தனார் பெயரில் இரு பாலருக்கும் பள்ளிகளை அமைத்து சேவை செய்தவர் சுவாமி சகஜானந்தா. அனைத்து தரப்பு மக்களும் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும் என வலியுறுத்தி வந்தவர். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, தண்டராம்பட்டில் நடைபெற்ற கருத்த ரங்கில், முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் சிறப்பு ரையாற்றினார். சிபிஎம் மாவட்டச் செய லாளர் எம்.சிவக்குமார், முன்னணி மாநில துணைப் பொதுச் செயலாளர் ப.செல்வன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், எம்.பிரகலநாதன், எஸ்.ராமதாஸ், ஏ.லட்சுமணன், மாவட்ட குழு உறுப்பினர் குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.