திருவள்ளுவர் தின விழா புதுச்சேரி அரசு சார்பில் செவ்வாய்கிழமை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள வள்ளுவர் உருவச் சிலைக்கு முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய் ஜே. சரவணன் குமார், சட்டப்பேரவை துணைத்தலைவர் ராஜவேலு, சட்டமன்ற உறுப்பினர்கள் நேரு (எ) குப்புசாமி, பாஸ்கர் (எ) தட்சிணாமூர்த்தி மற்றும் தமிழ் அறிஞர்கள் உட்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.