திருவள்ளூர்,மே 12-
திருவள்ளூர்-திருநின்றவூர் 6 வழிச்சாலை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்து போக்குவரத்துக்கு தயாராகும் என்று தெரிகிறது.
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ் சாலை திட்டம், சென்னை பாடியில் இருந்து ரேணிகுண்டா வரை,124 கி.மீ., துாரம் ஆறு வழிச் சாலையாக அமைகிறது. இந்த சாலை அமைக்கும் பணி 2011-ம் ஆண்டு அப்போது ரூ. 571 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது. சென்னை பாடியில் இருந்து, திருநின்றவூர் வரையும், ஆந்திர மாநிலம், புத்தூர் - ரேணிகுண்டா வரையும், நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப் படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, திருவள்ளூர் - புத்துார் வரை, இரு வழிச்சாலை யாக மட்டும் மாற்றப்பட்டது. திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலை, ஐ.சி.எம்.ஆர். அருகில் இருந்து, பெரும்பாக்கம் ஏரி, காக்களூர், தண்ணீர்குளம் கடந்து, செவ்வாப் பேட்டை, வேப்பம்பட்டு வழியாக, திருநின்ற வூர் தனியார் இரும்பு தொழிற்சாலை அரு கில், இணைக்கும் பணி கடந்த 7 ஆண்டுகளாக முடங்கியது. இதனால், ஆந்திர மாநிலத்தில் இருந்து, சென்னை செல்லும் வாகனங்கள், திருவள்ளூர் நகருக்குள் நுழைந்து செல்வதால், கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூர் - திருநின்றவூர் இடையே 17.5 கி.மீட்டர் தூரத்துக்கு 6 வழிச்சாலையாக தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பணி ரூ.364 கோடி மதிப்பில் மீண்டும் தொடங்கப் பட்டது. இதைத்தொடர்ந்து அளவீடு செய்யப்பட்ட இடத்தில், சாலை அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. பெரும்பாக்கம், காக்களூர், தண்ணீர்குளம், ஈக்காடு ஏரிகளில் சாலை அமைக்க, பொதுப்பணித்துறை அனுமதி பெறப்பட்டது. இதில் நீர்வழிச்சாலையில் 3 பெரிய மேம்பாலம், 12 சிறிய பாலம் அமைக் கப்பட உள்ளது. இதனை கடந்த சில நாட்க ளுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான்வர்கீஸ் ஆய்வு செய்து பணிகள் குறித்து கேட்டறிந்தார்.